9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுவை உள்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :