இளவரசியின் 2வது மருமகன் மீது எம்எல்ஏ சீட்டுக்காக ரூ.5 கோடி வாங்கியதாக வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் இரண்டாவது மருமகன் மீது பண மோசடி செய்ததாக எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சேலம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாயை பெற்று கொண்டு சீட் வாங்கி தராமலும் மற்றும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது சம்பந்தமாக இளவரசியின் இரண்டாவது மருமகனான ராஜராஜான் மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
தான் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட நபர் கருணாகரன் சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெ.பரத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை அக்டோபர் 5ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக உத்தரவிட்டார்.
Tags :