டெல்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்த கேரளாவின் கோழிக்கோடு லத்தூர் ரயில் தீவைப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை டெல்லியில் 10 இடங்களில் சோதனை நடத்தியது. இன்று காலை முதல் ஏஜென்சி அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லியின் ஷாஹின் பாக் மற்றும் சந்தேக நபர்களின் பிற இடங்களில் சோதனைகள் இன்னும் நடந்து வருகின்றன. லத்தூரில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ்ஸில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி ஷாருக் சைஃபி என்பவர் தீ வைத்தார். இதில் 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சைஃபி பின்னர் கைது செய்யப்பட்டார்.
Tags :