கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.வழங்கினார்.

by Admin / 07-01-2026 11:40:30pm
 கலைஞர் கைவினைத் திட்டத்தில்  மானியத்துடன் கூடிய கடனுதவிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மண்டல அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்வில், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு பூட்டு தயாரித்தல், பாரம்பரிய இசைக் கருவிகள் தயாரித்தல், பாசிமணி வேலைப்பாடுகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், போன்ற பல்வேறு கைவினைத் தொழில்களை மேற்கொள்ள மானியத்துடன் கூடிய கடனுதவிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.வழங்கி.ரூ. 337.84 கோடி செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ. 174.20 கோடி மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

Tags :

Share via