நாக சைதன்யாவை பிரிந்தார் சமந்தா: ‘நண்பர்களாக இருப்போம்’ என அறிவிப்பு

by Editor / 03-10-2021 05:08:28pm
நாக சைதன்யாவை பிரிந்தார் சமந்தா: ‘நண்பர்களாக இருப்போம்’ என அறிவிப்பு

நடிகை சமந்தா அவருடைய கணவர் நடிகர் அக்கினேனி நாக சைதன்யாவை பிரிந்ததாக தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் இவருக்கும் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணத்துக்கு 2 பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்தநிலையில் நாக சைதன்யா, சமந்தாவை அழைத்து படங்களில் நடிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு சமந்தா மறுத்தார். இதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டது. அது தகராறாக மாறியது. இருவரும் விவாவகரத்து செய்வது என்று முடிவு செய்தார்கள்.

சமந்தா நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில், அக்டோபர் 6 ந்தேதி இருவருக்கும் 4வது திருமண நாள் வரவிருக்கும் நிலையில், இருவரும் பிரிவது என்ற தகவலை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று மாலை அறிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், நாக சைதன்யாவும் கடந்த 10 வருடங்களாக நண்பர்களாக இருந்தோம். பிறகு கணவன் மனைவி ஆனோம். இப்போது நாங்கள் இருவரும் கணவன் மனைவி உறவில் இருந்து பிரிவது என்று முடிவு செய்திருக்கிறோம். 2 பேரும் அவரவர் பாதையில் பிரிந்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். எங்களிடையே இருந்த கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது. என்றாலும் கடைசிவரை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம். எங்கள் நட்பு தொடரும்.

இவ்வாறு சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

 

Tags :

Share via