ஓட்டுநர் உரிமம் வாகனப் பதிவு சான்றிதழ் புதுப்பிக்க கால அவசகாசம்... நவம்பர் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது...

by Admin / 16-10-2021 10:31:52pm
ஓட்டுநர் உரிமம் வாகனப் பதிவு சான்றிதழ் புதுப்பிக்க கால அவசகாசம்... நவம்பர் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம், வரும் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

 வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஏழாவது முறைகடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அளிக்கப்பட்ட இந்த அவகாசம் கடந்த மாதம் ஏழாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

 இந்நிலையில், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அதனால், புதுப்பிக்கக் கோரி நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீதும் இம்மாத இறுதிக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பது மற்றும் பரிசீலிப்பதை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via