மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை...
வில்லிவாக்கத்தில், மனைவி மீதான சந்தேகத்தில், மகளை தந்தை கொடூர கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்ஹில்ஸ் சாலை பகுதியை சேர்ந்த லாவண்யா. செவிலியராக வேலை பார்த்து வருகிறார். ராதாகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா தனியே வசித்து வருவதாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் லாவண்யா பணிக்கு புறப்பட்டதும், இரவு வீட்டில் இருந்த குழந்தைகளை சந்திக்க ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார்.,அவரது மகளான வதனா ஸ்ரீயிடம், லாவண்யாவின் நடத்தை குறித்து விசாரித்துள்ளார். வதனா ஸ்ரீ பதில் கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், கத்தியை எடுத்து மகளின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார் கழுத்தையும் அறுத்துள்ளார். ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியுள்ளார். வதனா ஸ்ரீ உதவிக்கேட்டு கூச்சல் இடவே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிதோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாகி இருந்த ராதாகிருஷ்ணனை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :