உடையும் நிலையில் ஏரி - பொதுமக்கள் வெளியேற்றம்.
உடையும் நிலையில் ஏரி - பொதுமக்கள் வெளியேற்றம்.
திருப்பதி - ராமச்சந்திராபுரம் பகுதியில் ராயலசெருவு என்ற ஏரி உள்ளது. கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட ஏரியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீர் முழுமையாக நிரம்பி உள்ளது.
ஏரியின் ஒரு கரையில் நீர் கசிவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் உடைந்து தண்ணீர் வெளியாகலாம் என்ற நிலை .
கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காளஹஸ்தி வரை உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏரி அருகே உள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை .சொத்து பத்திரங்கள், பணம், நகைகள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு செய்து வருகின்றனர்.
Tags :