பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தார்.

by Admin / 25-11-2021 12:35:37am
 பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தார்.

 டெல்லி சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தில் BSF அதிகார வரம்பை நீட்டிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள உலகளாவிய வணிக மாநாட்டைத் தொடங்கி வைக்குமாறு பிரதமருக்கு பானர்ஜி அழைப்பு விடுத்தார்.சமீபத்தில், உள்துறை அமைச்சகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லைகளுக்குள் BSF இன் அதிகார வரம்பை 50 கிமீ வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கை ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via