தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயில் மீளவட்டானில் இருந்து புறப்படுகிறது.

by Editor / 26-11-2021 06:43:06pm
தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயில் மீளவட்டானில் இருந்து புறப்படுகிறது.

பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக இன்று (நவம்பர் 26) ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியிலிருந்து இன்று மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடியிலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 12694 தூத்துக்குடி - சென்னை முத்து நகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை தூத்துக்குடி - மீளவிட்டான் (7.67 கி.மீ) ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயில் (12694) இரவு 8.15 மணிக்கு மீளவட்டானில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

 

Tags :

Share via