நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு

by Staff / 29-04-2024 12:48:10pm
நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு

நெல்லை பாஜக தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களிடமிருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சமீபத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இத்தனை நாட்களாக தாம்பரம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், வழக்கின் ஆவணங்கள் நேற்று(ஏப்.28) சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்வாக்கை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via