புலி தாக்கியதில் இருவர் பலி

by Staff / 12-12-2022 01:27:53pm
புலி தாக்கியதில் இருவர் பலி

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள கோண்டே கிராமத்தில் புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள புலி ஒன்று தாக்கியதில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் புலியை கொல்ல முடிவு செய்தனர். ஆனால், சிறிது நேரத்தில் புலி மற்ற இருவரை கூட தாக்கி விட்டு சென்றுவிட்டது.தகவல் கிடைத்ததும் புலிகள் காப்பக அதிகாரி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வன விலங்குகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் கோபமடைந்து அவரை தாக்கியுள்ளனர். புலியை பிடிக்க ஏற்பாடு செய்வதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்த பின்பு தான் கிராம மக்கள் அமைதியடைந்தனர்.

 

Tags :

Share via