1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட வேண்டும்- இபிஎஸ்
1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட வேண்டும். இல்லையெனில், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வீணாக கேரள கடலில் கலக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.
Tags :