மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற நபர்
ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம் (32). மதுபோதைக்கு அடிமையான இவர் மதுகுடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த பிரேமராம் தனது பைக்கில் மனைவியின் கைகளை கட்டி தரதரவென இழுத்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Tags :