வடசேரி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அருகே ஓட்டுபுர தெரு பகுதியில் கழிவுநீர் ஓடையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வடசேரி போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார் என்ற விபரம் தெரியாத நிலையில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :