நிதி மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் கைது

by Staff / 13-08-2024 02:47:09pm
நிதி மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் கைது

நிதி நிறுவன மோசடி புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் சிட் பண்ட் நிதி நிறுவனத்தில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக சிவகங்கை தொகுதியில் தாமரை சின்னத்தில் தேவநாதன் யாதவ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via