குண்டுவெடிப்பு வழக்கு - தமிழகத்தில் என்ஐஏ சோதனை

by Staff / 05-03-2024 12:00:19pm
குண்டுவெடிப்பு வழக்கு - தமிழகத்தில் என்ஐஏ சோதனை

பெங்களூருவில் கடந்த வாரம் ராமேஸ்வரம் கபே என்ற ஹோட்டலில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் 1 இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த 1ஆம் தேதி மதியம் 12.55 மணியளவில் அந்த ஹோட்டலில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

Tags :

Share via