அரசு மருத்துவமனை வளாகத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராயவேலூரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்,ரத்த வெள்ளத்தில் இருந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என தெரியவில்லை.இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : The person who attempted suicide by beheading at the Government Hospital premises