நிவாரணத் தொகை ரூ.8 லட்சமாக உயர்வு

பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிவாரணத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :