ஹோட்டலில் தீ விபத்து; 2 பேர் பலி

by Staff / 03-11-2022 04:22:16pm
ஹோட்டலில் தீ விபத்து; 2 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் நடந்துள்ளது. மதுராவில் உள்ள பிருந்தாவன் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில், தொழிலாளர்கள் உமேஷ் (30), பீரி சிங் (40) ஆகியோர் இறந்தனர். மதுரா-பிருந்தாவன் சாலையில் அமைந்துள்ள ஹோட்டலின் முதல் தளத்தில் உள்ள சமையலறையின் ஸ்டோர் அறையில் முதலில் தீப்பிடித்தது. இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு மீட்புப் பிரிவு வாகனங்கள் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்து நடந்த போது ஹோட்டலில் சுமார் 100 பேர் தங்கியிருந்தனர். அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு மீட்புக் குழுவினரின் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக முதற்கட்ட முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே கூடுதல் தகவல்கள் தெரியவரும்.

 

Tags :

Share via