நூல் விலையைக்கட்டுப்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம்

by Admin / 29-11-2021 09:02:17pm
நூல் விலையைக்கட்டுப்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம்

நூல் விலையைக்கட்டுப்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம்

நூல்விலையைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில்,"நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது என்றும்இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்பு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் விலையேற்றத்தைக்கட்டுப்படுத்தா விட்டால் நாட்டில் 2- வது  பெரிய தொழிலான ஜவுளித்துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். 2021-22ஆம்ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத்திட்டத்தில்5%.அடிப்படை சுங்க வரி.5%விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும்10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால்,ஒட்டுமொத்த இக்குமதி வரி11%ஆக உயர்ந்ததே பருத்திவிலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதுவதாக மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via