சேந்தமரம் மதுபான கடை அருகே மதுபாட்டிலை வைத்து ரகளையில் ஈடுபட்ட காவலர் கைது.

by Editor / 13-12-2021 09:18:36pm
சேந்தமரம் மதுபான கடை அருகே மதுபாட்டிலை வைத்து ரகளையில்  ஈடுபட்ட காவலர் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் மதுபான கடை அருகே மதுபோதையில் மதுப்பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு ஒருகாவலர் யூனிஃபார்மோடு  ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மதுப்பானக்கடையில் மது அருந்த வந்தவர்கள்  காவலர் ஒருவர் சாலையில் மதுப்பாட்டிலோடு தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனை ஏராளமான மக்கள் வேடிக்கைபார்த்து வேதனையை தெரிவித்து சென்றனர்.மேலும்  இவரது செயலை அலைபேசியில் வீடியோ எடுத்து சென்றவண்ணம் இருந்தனர்.இவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் இவரது பெயர் ராஜகுரு தற்போது திருமலாபுரம் கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.இவர் மதுபான பாட்டில் வைத்த ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த வீடியோ பரவலைத்தொடர்ந்து அந்த காவலரை கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

சேந்தமரம் மதுபான கடை அருகே மதுபாட்டிலை வைத்து ரகளையில்  ஈடுபட்ட காவலர் கைது.
 

Tags :

Share via