ஸ்டாலின் முதல்வர்: நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்

by Editor / 03-05-2021 12:47:22pm
ஸ்டாலின் முதல்வர்: நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்

ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமம்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இதையடுத்து அவர் முத்தாலம்மன் கோவிலில் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

 

Tags :

Share via