நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தஇருசக்கரவாகனம்

by Editor / 18-12-2021 01:14:17am
நள்ளிரவில் நடுரோட்டில்  தீப்பிடித்து எரிந்தஇருசக்கரவாகனம்

சென்னை அடையாறில் இருந்து வளசரவாக்கம் நோக்கி  இருசக்கரவாகனத்தில்  சென்று கொண்டிருந்தார் அவர் ஈக்காட்டுத்தாங்கல் - காசி தியேட்டர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய பைக் திடீரென இன்ஜின் சூடாகி இருக்கிறது. மேலும்  பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பாலத்திலேயே ஓரமாக வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது திடீரென பைக்கிலிருந்து கரும்புகை வெளியேறியது. உடனே அவரது  எதிர் நேரத்தில் பாரத திடீரென தீப்பிடித்து எரிந்தது. சாலையில் பிற வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்ததால் அந்தப் பகுதியில்  போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

தகவலறிந்த கிண்டி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் வந்து தீயை அணைத்தனர். குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலான ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரிசெய்தனர்.
 

 

Tags :

Share via