80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 26-12-2021 04:00:47pm
 80 லட்சம் தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 80 லட்சம் தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்,மேலும் அவர் தெரிவிக்கையில் சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது; சென்னையில் இன்று 2.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் 34 பேர் பாதிப்பு; 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர்; 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் -என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via