மார்கழியில் மக்களிசை நிறைவு பெற்றது.

by Editor / 31-12-2021 09:58:54pm
மார்கழியில் மக்களிசை நிறைவு பெற்றது.

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி கருணாநிதி,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.கடந்த 8 நாட்களாகச் சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வரும் மார்கழியில் மக்களிசை இன்றோடு முடிவடைகிறது. இறுதி நாளான இன்று, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கருணாநிதி கலந்துகொண்டு " இந்த சபாவில் பல நிகழ்ச்சிகள் நடந்து இருக்கும், இந்த நேரம், இந்த சபாவில் அமைதியாகப் பாடிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்று மார்கழியில் மக்களிசையில் மேடையே அதிருகிறது. எல்லா வருடமும் இதே வீரியத்தோடு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும், நமது உரிமைகளை அது மீட்க வேண்டும்" என்று உரையாற்றினார்.


 

 

Tags :

Share via