முதலமைச்சர் மு.கஸ்டாலின்  வாழ்த்து செய்தி

by Admin / 01-01-2022 01:25:33am
முதலமைச்சர் மு.கஸ்டாலின்  வாழ்த்து செய்தி

முதலமைச்சர் மு.கஸ்டாலின்  வாழ்த்து செய்தியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனித குலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்தது..தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் பணிகளைத் தொடர்ந்திட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தமிழக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும் .  .யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழகம் அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும் உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிட வேண்டும். என்று அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் 
 

 

Tags :

Share via