ரூ. 6.5 கோடி ஆம்பர் கிரீஷை வாங்க முயன்ற உடன்குடி முக்கிய பிரமுகர் யார்? போலீசார் விசாரணை*

by Editor / 08-01-2022 03:14:17pm
ரூ. 6.5 கோடி ஆம்பர் கிரீஷை வாங்க முயன்ற உடன்குடி முக்கிய பிரமுகர் யார்? போலீசார் விசாரணை*

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் உடன்குடி வில்லிகுடியிருப்பு சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சோதனை செய்ததில் திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீசை துணிப்பைக்குள் மறைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.விசாரணையில் அவர் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பரதர் தெருவைச் சேர்ந்த முருகேஷ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 6.5 கிலோ ஆம்பர் கிரீஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 6.5 கோடி ஆகும்.இதைத்தொடர்ந்து ஆம்பர்கிரீஸ் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை எங்கு கொண்டு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்? என்று முருகேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது உடன்குடியை சேர்ந்த ஒரு பிரமுகரிடம் விற்பனை செய்வதற்காக ஆம்பர்கிரீசை கடத்தி வந்ததாக தெரிவித்தார். அவர் யார் என கேட்டபோது, அவரது பெயர், விபரம் தெரியாது. ஆனால் பார்த்தால் தெரியும் எனவும் முருகேஷ் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து அந்த பிரமுகர் யார்? அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்-யார்? அவர்கள் அதனை எங்கு கடத்த முயன்றனர்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

Tags :

Share via