கல்வி அழியாத செல்வம்

by Editor / 24-07-2021 07:26:42pm
கல்வி அழியாத செல்வம்


‘இள­மை­யில் கல்’ என்­பதை உணர்ந்­தி­ருக்க வேண்­டும். இள­வ­ய­தில் படிப்­பது நம் மன­தில் அப்­ப­டியே பசு மரத்­தாணி போல் பதிந்­து­வி­டும் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும்.


கல்­வி­தான் ஒரு­வனை அறி­வாளி ஆக்­கு­கி­றது. அறி­யாமை எனும் இருட்­டைக் கல்வி எனும் ஒளி­தான் போக்­கு­கி­றது. நல்ல புத்­த­கங்­கள் அறிவு கண்­ணைத் திறக்­கும் ஒரு திற­வு­கோல். கல்வி ஒரு­வனை மட்­டும் மேம்­ப­டுத்­தாது. அவ­னைச் சார்ந்­த­வர்­க­ளை­யும், சமு­தா­யத்­தை­யும், ஏன் நாட்­டை­யுமே அது உயர்த்த உத­வும்.


கல்­வி­யின் பெரு­மை­யைப் பழம் பாடல் ஒன்று அழ­கா­கப் பேசும். கல்வி என்­பது அழி­யாத செல்­வம். அது காலத்­தால் அழி­யாது. கள்­வ­ரா­லும் கவர முடி­யா­தது. வெள்­ளத்­தால் போகாது. தீயி­னா­லும் வேகாது. கல்­விச் செல்­வம் தவிர ஏனைய செல்­வங்­க­ளைக் கள்­வர்­கள் திரு­டிச் சென்­று­விட முடி­யும்; வெள்­ளம் அடித்­துக் கொண்டு போகும். தீ தனது செந்­நிற ஜூவா­லை­யால் பொசுக்க முடி­யும்.
ஒரு முறை பார­தி­யார் எட்­ட­ய­புர அரச சபை­யில் இருந்து தன் ஊருக்­குத் திரும்­பிச் சென்­றார். அர­சர் கொடுத்த பணத்­தில் நல்ல நல்ல நுால்­களை வாங்கி வந்­தார். பார­தி­யின் மனைவி செல்­லம்மா தன் கண­வர் தமக்­குப் பிடித்­த­தாய் வாங்கி வரு­வார் என்று ஆசை­யாக வாச­லில் நின்­ற­வாறு அவ­ரது வரவை எதிர்­நோக்­கிப் பார்த்­தி­ருந்­தார்.


ஆனால், தன் கண­வரோ புத்­த­கங்­க­ளாக வாங்கி வந்­த­தைக் கண்டு சினம் கொள்­கி­றாள். சினம் கொண்ட மனை­வியை பார­தி­யார் சமா­தா­னப்­ப­டுத்­து­கி­றார்.கல்­விச் செல்­வம் அள்ள அள்ள குறை­யாது. கொடுத்­தா­லும் குறை­யாது. எடுத்­தா­லும் குறை­யாது.
‘‘தொட்­ட­னைத்து ஊறும் மணற்­கேணி மாந்­தர்க்­குக்

கற்­ற­னைத்து ஊறும் அறிவு’’
இறைக்க இறைக்­கச் சுரக்­கும் நீர் போல அறி­வா­னது கொடுக்­கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்­கும். பெற்­றோர்­க­ளுக்கு ஒரு வார்த்தை! உங்­கள் குழந்­தைக்­குக் கல்­வி­யின் அவ­சி­யத்­தைப் புரிய வையுங்­கள். கற்­ப­தில் விருப்­பத்தை உண்­டாக்­குங்­கள். ‘‘ஒரு பெண் கல்வி கற்­றால் அது அவ­ளது குடும்­பத்­துக்கே கற்­பிப்­ப­து­போல்’’ என்­பார் பார­தி­தா­சன்.
கல்­வி­தான் எது நல்­லது? எது கெட்­டது? எனப் பகுத்­த­றி­யக் கற்­றுக் கொடுக்­கும். ஒரு நாண­யத்­துக்கு இரு பக்­கம் உண்டு என்­ப­தை­யும் உணர வைக்­கும். எந்த விஷ­யத்­தை­யும் உற்று நோக்­கக் கற்­றுக் கொடுக்­கும். சம­யோ­கி­த­மாக நடந்து கொள்­ள­வும் கல்­வி­ய­றிவே கை கொடுக்­கி­றது 


அர­சன் ஒரு­வன் அதி­கா­லை­யில் எழுந்து உப்­ப­ரி­கை­யில் நின்­றான். அப்­போது அந்த வழியே சென்ற ஓர் இளை­ஞன் அர­ச­னின் பார்­வை­யில் பட்­டான். பிறகு அர­சன் திரும்­பு­கை­யில் படி இடித்து நெற்­றி­யில் ரத்­தம் வந்­தது. இத­னால் சினம்­கொண்ட மன்­னன், ‘‘பிடித்து வாருங்­கள் அந்த இளை­ஞனை’’ என்று கட்­ட­ளை­யிட்­டார்.
அந்த இளை­ஞனோ, ‘‘என் மேல் சுமத்­திய குற்­றம் என்ன?’’ என்று துணிந்து அர­ச­ரி­டம் கேட்­டான். அர­சரோ, ‘‘இன்று காலை­யில் உன் முகத்­தில் விழித்­த­தால் எனக்கு இந்த கதி ஏற்­பட்­டது. எனவே நீ உயி­ரோடு இருக்­கக்­கூ­டாது’’ என்­றான். அந்த இளை­ஞனோ இதைக் கேட்டு சிரித்­தான்.
‘‘ஏன் சிரிக்­கி­றாய்?’’ என்­றான் மன்­னன்.
‘‘அரசே! மன்­னிக்க வேண்­டும்! என் முகத்­தில் தாங்­கள் விழித்­த­தால் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டது சின்ன காயம். ஆனால் என் கதி­யைப் பாருங்­கள். அர­ச­ரின் தரி­ச­னம் கிடைத்­த­தால் என் உயிர் போகப் போகி­றதே! இதை நினைத்­தேன். யாரு­டைய முகம் அதிர்ஷ்­ட­மா­னது என எண்­ணியே சிரித்­தேன்’’ என்­றான்.
அந்த இளை­ஞன் தன்­னு­டைய சாமர்த்­தி­யப் பேச்­சால் உயிர் தப்­பி­னான். இத­னைத் தந்­தது கல்­வி­ய­றி­வு­தானே!

நம் குழந்தை படிப்­பில் சிறந்து விளங்­கி­னால் பெற்­றோர்­கள் அவர்­களை ஊக்­கு­விக்க வேண்­டும். ஏதே­னும் பரி­சு­கள் கொடுத்து அவர்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்த வேண்­டும். குறை­வான மதிப்­பெண் வாங்­கி­யி­ருந்­தால் பொறு­மை­யாக அவர்­க­ளது தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்ட வேண்­டும். குழந்­தை­கள் கண்­ணா­டி­யைப் போல் ‘ஹேண்­டில் வித் கேர்’ என்­பது போல அவர்­களை ஜாக்­கி­ர­தை­யாக கையாள வேண்­டும்.

கூடு­மா­ன­வரை உங்­கள் குழந்­தை­கள் படிக்­கும்­போது அவர்­கள் அரு­கில் இருங்­கள். தொலைக்­காட்­சியை மூடி­வி­டு­வது உத்­த­மம். பெரி­யோர்­கள் இருக்­கும் வீட்­டில் அவர்­கள் புரிந்து கொள்­ளும் வகை­யில் எடுத்­து­ரைத்து புரிய வைக்­க­லாம். இல்­லை­யேல் புத்­த­கங்­களை வாங்கி வந்து படிக்க சொல்­லுங்­கள். எல்­லோ­ருமே படிக்­கும் சூழலை உரு­வாக்­கி­னால் குழந்­தை­க­ளும் விருப்­பத்­தோடு படிக்­கும். கல்­வி­தான் வாழ்க்­கையை வழி நடத்­திச் செல்­கி­றது என்­பதை அவர்­க­ளுக்கு சொல்­லித் தர வேண்­டும். பாது­காப்­பான வாழ்க்­கையை வழங்­கு­வ­தும் கல்­வி­தான்.

படிப்­பது என்­பது பாடப் புத்­த­கத்தை மட்­டும் குறிப்­பது அல்ல; நல்ல நல்ல நீதிக் கதை­கள், அறி­ஞர் பெரு­மக்­க­ளின் வாழ்க்கை வர­லாறு புத்­த­கங்­க­ளைப் படிக்­கும் பழக்­கத்தை நாம்­தான் குழந்­தை­க­ளுக்கு பழக்க வேண்­டும். வாசிக்­கும் பழக்­கம் ஒரு­வ­ரது மனதை வளப்­ப­டுத்­தும். வாசிப்­பின் மூலம் பல சாத­னை­கள் உண்­டா­னதை வர­லாறு நமக்­குச் சொல்­கி­றது.
உங்­கள் குழந்­தை­க­ளின் பிறந்த நாள் என்­றால், அவர்­க­ளுக்கு புத்­த­கங்­க­ளைப் பரி­சா­கத் தந்து படிக்­கும் பழக்த்தை வலி­யு­றுத்­துங்­கள். வெறும் கல்வி மட்­டும்­தான் படிப்பு அல்ல. இசை, நாட்­டி­யம், ஓவி­யம், விளை­யாட்டு என பல துறை­க­ளில் ஆர்­வம் உள்ள துறை­க­ளில் அவர்­க­ளைச் சேர்த்து ஊக்­கப்­ப­டுத்­துங்­கள். புத்­தக வாசிப்­பால் உயர்ந்­த­வர்­கள் பலர் உண்டு.


அப்­படி ஊக்­கப்­ப­டுத்­தி­ய­தால்­தான் ஒரு சச்­சின், ஒரு விஸ்­வ­நாத் ஆனந்த் எனச் சாத­னை­யா­ளர்­க­ளைப் பார்க்க முடி­கி­றது. அறி­வுள்­ள­வர்­க­ளால் தான் வாழ்க்­கையை அமை­தி­யான முறை­யில் நடத்த முடி­யும். எந்­த­வி­தச் சிக்­க­லை­யும் தீர்­கக் முடி­யும்.
கற்­றோர்க்கு எங்கு சென்­றா­லும் சிறப்­பு­தான். கல்­வி­யில் பெரி­ய­வன் கம்­பன் அல்­லவா! அவ­ருக்கு பணி­யா­ளாக சோழ மன்­னரே இருந்­தார் என்­பதை அறி­யும்­போது கல்­வி­யின் பெருமை புரி­கி­றது அல்­லவா!
கட்டுரை - ஆர் .சக்தி 

 

Tags :

Share via