வெடி விபத்து பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு
விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூரில் விசுவநத்தத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இங்கு நேற்று மாலை வழக்கமாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, மீதமுள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோரை நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குபேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
பட்டாசு விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பட்டாசு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
Tags :