15 லட்சம் நிதியுதவி அளித்த சக காவலர்கள்

by Admin / 30-01-2022 11:17:07am
 15 லட்சம் நிதியுதவி அளித்த சக காவலர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டுப்பூச்சி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தமிழக காவல்துறையில் 2013- ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். 

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.

அவருடன் பணியில் சேர்ந்த 2013 பேட்ச் காவலர்கள் அனைவரும் சமூக வலைதளமான வாட்ஸ்அப்  மூலம் ஒன்றுசேர்ந்து  ரூபாய் 15 லட்சம் நிதி திரட்டி உள்ளனர் .

அந்த நிதி தொகை  15 லட்சம் ரூபாய்  பன்னீர் செல்வத்தின் குடும்பத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.

உதவியை பெற்றுக்கொண்ட காவலரின் குடும்பத்தினர் எனது மகனுக்கு இறைவன் நல்ல ஆயுளை கொடுக்காவிட்டாலும் காவல்துறையில் நல்ல நண்பர்களை கொடுத்துள்ளான்.

உதவி செய்த 2013 பேட்ச் காவலர்கள் அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை கண்ணீர்மல்க  தெரிவித்தனர் 

 

Tags :

Share via