மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர்

by Admin / 01-02-2022 10:12:29am
மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர்

சென்னை தண்டையார்பேட்டை அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தளபதி - சண்முகபிரியா தம்பதி. கணவர் தளபதி நேற்றிரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மனைவி கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை தனது பெயரில் மாற்றி கொடுக்கும்படி கூறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த கணவர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார். கணவரை கைது செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.

 

Tags :

Share via