ரூ. 24. 19 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு, 2019ல் பிரபல சினிமா பாடகர் பெயரில் முகநுாலில் நட்பு அழைப்பு வந்தது.அவரும் உண்மை என நினைத்து, அந்த நபரிடம் பேச ஆரம்பித்தார். இதை சாதகமாக மாற்றிய அவர், பெண்ணிடம் அடிக்கடி பணம் வாங்கினார். இவரும், மொத்தம் 24. 19 லட்சம் ரூபாயை பெற்று கொண்டவர் சில மாதங்களாக பேசுவதை தவிர்த்தார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். எஸ். பி. , பாஸ்கரன் உத்தரவில் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை மாம்பாக்கத்தை சேர்ந்த மகேந்திரவர்மனை கைது செய்தனர். அவரிடமிருந்து கார், இரண்டு டூ - வீலர், மூன்று விலை உயர்ந்த அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். இவர், 4 ஆண்டுகளுக்கு முன், கோவை மாவட்டத்தில் இது போன்ற வழக்கில் கைதானவர்.
Tags :