ஸ்பெயினில் தீவு கடலில் படகு கவிழ்ந்து 16 பேரும் மாயமானதாக தகவல்

by Admin / 04-02-2022 02:17:19pm
ஸ்பெயினில் தீவு கடலில் படகு கவிழ்ந்து 16 பேரும் மாயமானதாக தகவல்

ஸ்பெயினில் கனேரி தீவு கடலில் படகு கவிழ்ந்து 16பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஸ்பெயினிள்  நுழைய 58 பேர் வந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் 41 பேர் மற்றும் உயிரிழந்த ஒருவரின் உடலை மீட்டு கரைக்கு திரும்பினர்.

படகு நெரிசலுக்கு மத்தியில் பயணம்  செய்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் காணாமல் போன 16 அகதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via