பாஜக அலுவலகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது
சென்னையில் தி.நகர் பகுதியில் நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாஜக தலைமை அலுவலகத்தில் வாயில் கதவுகள் சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கர்த்தா வினோத் என்பவர் கைது.நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் காவல்துறையினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நந்தனத்தை சேர்ந்த வினோத் மீது பல குற்றவழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.தொடர்ந்து காவல்துறை அவரிடம் விசாரணைநடத்திவருகிறது. இதனால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags : One arrested in connection with attack on BJP office