ஆன்மீக பேச்சாளர். இலங்கை ஜெயராஜ் காலமானர் 

by Editor / 14-05-2021 05:21:55pm
ஆன்மீக பேச்சாளர். இலங்கை ஜெயராஜ் காலமானர் 



ஆன்மீகபேச்சாளர். இலங்கை ஜெயராஜ் இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை ஜெயராஜ், இவர் சேர்ந்த சமய பேச்சாளர். இவரை தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அனைவராலும் அழைக்கப்படுபவர். இலக்கியம், சமயம் , தத்துவம் போன்றவை அவரது அறிவு புலங்கள். ராமாயணம், திருக்குறள், சைவ சித்தாந்தம் போன்றவை அவருக்கு மிகவும் பிடித்த இலக்கியங்கள். இவர் அகில இலங்கை கம்பன் கழகம், யாழ்ப்பாணம் கம்பன் கழகம், ஐஸ்வர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார். இவர் ஜெயராஜ்ஜியம் உன்னை சரணடைந்தேன் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். தமிழுக்கும், இலக்கியத்துக்கும் மிகப்பெரிய தொண்டாற்றியவர். கம்பன் விருது, உலக சாதனையாளர் விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

Tags :

Share via