போரால் இந்தியாவுக்கும் பாதிப்பு

by Admin / 06-03-2022 12:10:17pm
போரால் இந்தியாவுக்கும் பாதிப்பு

இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டாவது, போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா, உக்ரைன் வேளாண் உற்பத்திப் பொருட்களின் முன்னணி நுகர்வோர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார். போர் நீடித்தால், இந்தியாவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
 
அதனால் எந்த நாட்டுக்கும் நன்மை ஏற்படுத்தாத இந்த போரை நிறுத்துமாறு புதினை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்திய மக்களும் ரஷ்ய தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்க்க வேண்டும் என்றும் குலேபா கேட்டுக் கொண்டார்.   


 
 

 

Tags :

Share via