850 உணவகங்களை தற்காலிகமாக மூடிய மெக்டொனால்டு

by Admin / 09-03-2022 11:54:13am
 850 உணவகங்களை தற்காலிகமாக மூடிய மெக்டொனால்டு

உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் ரஷியாவிற்கு ஈடுகொடுத்து வருகிறது.
 
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
    
இந்நிலையில், ரஷியாவில் உள்ள 850 உணவகங்களையும் மெக்டொனால்டு நிறுவனம் தற்காலிகமாக மூடுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 

Tags :

Share via