படுக்கை அறைக்குள் கேமரா வாய்ஸ் ரெக்கார்ட் வைத்து கணவன் கொடுமை உயிரை மாய்த்த பெண்

by Staff / 25-03-2022 05:06:29pm
படுக்கை அறைக்குள் கேமரா வாய்ஸ் ரெக்கார்ட் வைத்து கணவன் கொடுமை உயிரை மாய்த்த பெண்

சந்தேக புத்தியால் படுக்கை அறையில் கேமராவுடன் கூடிய வாய்ஸ் ரெக்கார்டு பொருத்தி கணவன் சைக்கோபோல தினம் தினம் கொடுமை படுத்தியதால்ராய்ட்டர்  செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ஊடகளவியர்உயிரை மாய்த்துக்கொண்ட விபரீதம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரில்ராய்ட்டர்ஸ்  நிறுவனத்தில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஸ்ருதி நாராயணன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2017ஆம் ஆண்டு கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சோதிக்கும் கேரளா பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது திருமணம் முடிந்த கையுடன் கணவன்  சுருதி இடம் மிகக் கொடூரமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சைக்கோ தனமான கணவன் எப்போதும் சந்தேகத்துடன் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார் படுக்கை அறைக்குள் கேமரா வைப்பது வாய்ஸ் ரெக்கார்ட் வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு உள்ளார்.

சுருதியை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது இந்த தம்பதிக்கு 4 வருடங்களாக குழந்தை ஏதும் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் கணவனின் கொடுமை அதிகரித்து வந்துள்ளது சம்பவத்தன்று செல்போனுக்கு  அவரது தாயார் பலமுறை அழைத்தும் செல்போன் எடுக்காமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு போன் செய்து நிலவரத்தை எடுத்துக் கூறி உள்ளனர் உள்பக்கமாக பூட்டப்பட்டு உள்ள வீட்டில் யாரும் கதவை திறக்க முன்வராததால்.
 
வீட்டின் பால்கனி வழியாக சென்று கதவை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் சுருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது இதையடுத்து கேரளாவில் உள்ள சுருதியின் உறவினர்கள் தங்கள் வீட்டு உனக்குபெண்ணுக்கு  நிகழ்ந்த கொடுமைகளை புகாராக காவல்நிலையத்தைதில்  அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சுருதியின் சைக்கோ கணவன் மீது வழக்குப்பதிவு செய்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊருக்கு தன்னம்பிக்கை சொல்லும் ஊடகத் துறையில் பணிபுரிந்த சுருதி நாராயணன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எதிர்த்துப் போராடி தீர்வுகாணமால்  விபரீத முடிவை எடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மிகவும் வேதனை உச்சத்தை தொட்டுள்ளது.
 

 

Tags :

Share via