பாதாள சாக்கடைக் குழிக்குள் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்றவர்களும் பலி

by Staff / 30-03-2022 12:54:08pm
பாதாள சாக்கடைக் குழிக்குள் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்றவர்களும் பலி

தலைநகர் டெல்லியில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடைக் குழிக்குள் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்ற மூன்று பேரும் சிக்கிக் கொண்டதை அடுத்து மூச்சுத்திணறி நான்கு பேரும் உயிரிழந்தனர்.

சஞ்சய் காந்தி  டிரான்ஸ்போர்டு நகரில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தவறி  சாக்கடையில் விழுந்த நிலையில் அவரைக் காப்பாற்ற சென்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டதாக அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

 விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்பட பலரும் மீட்க முயற்சி மேற்கொண்டனர் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்

 

Tags :

Share via