ஒரே முறையில்12. 450 கோடி கடனை திருப்பி செலுத்திய சபூர்ஜி பலோஞ்சி கம்பெனி
மும்பையைச் சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே முறையில் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தியுள்ளது.
டாடா குழுமத்தின் 18.7 விழுக்காடு பங்குகளை கொண்டுள்ள சபூர்ஜி பலோஞ்சி குழுமம் கட்டுமான கப்பல் போக்குவரத்து மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.
கொரோனோ சூழலில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதால் இந்நிறுவனம் கடன் சுமையால் தத்தளித்தது இப்போது கட்டுமான பணிகள் வேகம் பெற்று உள்ளன.
இந்த நிலையில் பல்வேறு வங்கிகள் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு மொத்தம் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாயை ஒரே முறை கடன் திருப்பிக் கொடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்னும் 1600 கோடி ரூபாய் மட்டுமே கடன் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது
Tags :