சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள்.

by Staff / 05-04-2022 02:36:48pm
சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம்  வென்ற மாணவர்கள்.

ஏப்ரல் 1 முதல் நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகளில் மொத்தம் நான்கு நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா சார்பாக தீபம் அறக்கட்டளையைச் சேர்ந்த 12 மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில் 9 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்திய தீபம் அறக்கட்டளையைச் சேர்ந்த மாணவர்கள், பயிற்சியாளர் ஈஸ்வரன் தலைமையில் சொந்த ஊர் திரும்பினர். அப்போது அவர்களுக்கு தேனி அரண்மனைபுதூர் விலக்கிலிருந்து கொடுவிலார்பட்டி வரை ஊர் மக்கள் திரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இவர்கள் உலக சாதனை புத்தகத்திலும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via