இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
கடந்த பிப்ரவரியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் ரிக்டரில் 6.1 அளவிலான கடுமையான நிலநடுக்கம் பதிவானது.
இதில், பசமன் மற்றும் பசமன் பராத் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தினால், 10 பேர் உயிரிழந்தனர். 13 ஆயிரம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.
Tags :