சந்தன மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

by Staff / 16-09-2022 12:32:09pm
சந்தன மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

கோவை அருகே காரமடை வனச் சரகத்தில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி செய்த 3 பேரை வனத் துறையினர்  கைது செய்தனர்.காரமடை வனச்சரகத்தில் காரமடை பிரிவு, குண்டூர் சுற்றில் அன்சூரை அடுத்த மோரிப்பள்ளம் பகுதியில் சந்தன மரத்தினை வெட்டிக் கடத்த சிலர் முயற்சி செய்வதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ரோந்துப் பணி மேற்கொண்டபோது அப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குண்டூரைச் சேர்ந்த முருகேசன் (35), அன்சூரைச் சேர்ந்த வீரையன் (எ) காளிமுத்து (42), சஞ்சித் (21), சொரண்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஆகிய நால்வரும் 10 – 15 செ.மீ சுற்றளவுகள் கொண்ட 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தனர் என்பது தெரியவந்ததது.

இதுதொடர்பாக, வீரையன், ஆனந்தகுமார், சஞ்சித் ஆகிய மூன்று பேரையும் கைது, அவர்களிடம் இருந்து சந்தன மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அடைப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமைறவாக உள்ள குண்டூரைச் சேர்ந்த முருகேசனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via