காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

by Editor / 10-06-2025 05:06:37pm
காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்


இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் (39) கட்டடத் தொழிலாளி. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஷெமீரா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவ தினம் காலை ஆல்வின் வேலைக்குச் சென்று விட்டார். 

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஷெமீராவை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆல்வின் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷெமீராவைத் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via