பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி

by Editor / 09-04-2022 07:11:12pm
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் 18 - 59 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியின் விலையுடன், சேவைக் கட்டணமாக அதிகபட்சம் 150ரூபாய் வரை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது தவனை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் எனவும் தடுப்பூசியை செலுத்திய பிறகு கோவின் செயலியில் பதிவு செய்வது கட்டாயம் என பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via