உக்ரேன் திரையரங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல்
உக்ரேன் தெற்கு பகுதி நகரமான மரியுபோல் ரஷ்யப் படைகள் நடத்திய கொடூர தாக்குதலில் மிகப்பெரிய திரையரங்கு ஒன்றுஉருக்குலைந்து காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.உக்ரேன் மீது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி மாரியுபோல் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்து இருப்பதாகவும் 300க்கும் மேல் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :