கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான  வதந்திகளை நம்ப வேண்டாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

by Editor / 20-05-2021 04:38:12pm
கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான  வதந்திகளை நம்ப வேண்டாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்



கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். இதுபற்றி ஆய்வு செய்ய 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுபோன்ற தொற்று வர வாய்ப்பு உள்ளது.கருப்பு பூஞ்சை நோயை ஆராய 10 பேர் குழு: சுகாதாரத்துறை செயலாளர்கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிவிக்கப்பட வேண்டிய நோய் தொற்று. கருப்பு பூஞ்சை என்ற மியூகார்மைகோசீஸ் நோய் புதிய நோய் அல்ல.கருப்பு பூஞ்சை கொரோனா தொற்று வருவதற்கு முன்பாகவே கண்டறியப்பட்ட நோய் தான்.கொரோனாவுக்கு பின்னர் கருப்பு பூஞ்சை நோய் உருவானதாக கூறுவது தவறானது.கருப்பு பூஞ்சை தொற்று குணப்படுத்தக்கூடிய நோய் தொற்றுதான். கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்தநோய் பாதித்தால் சுகாதாரத்துறைக்கு தகவல் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via