கல்லூரிமாணவி பாலியல் வன்கொடுமை-கொடூரன் கைது.

by Editor / 09-11-2022 09:14:38am
கல்லூரிமாணவி  பாலியல் வன்கொடுமை-கொடூரன் கைது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார்(25). குடியாத்தம் அரசு கல்லூரியில் பி. ஏ. தமிழ் படித்து வரும் 17 வயது சிறுமி வார விடுமுறை நாட்களில் ஒடுகத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். வேலை செய்துவிட்டு இரவு கத்தாரி குப்பம் பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கியவர் தந்தை வராததால் நடந்து சென்றார். வாழைத்தோட்டம் வழியாக நடந்து சென்ற போது இளைஞர் சரத்குமார் அந்த சிறுமியை வழிமறித்தார். தன்னுடன் பைக்கில் வருமாறு சொல்லி இருக்கிறார். அதற்கு சிறுமி மறுத்து செல்லவும் துரத்திக் கொண்டு கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் . அதில் சிறுமி சத்தம் போட்டுள்ளார். அவ்வழியாக வந்த 2 சிறுமிகள் அவரை விட சொல்லி கேட்டனர்.

அந்த இரண்டு பேரையும் மிரட்டியுள்ளார். உடனே அந்த சிறுமியை தரதரவென்று இழுத்து வாழைத்தோட்டத்திற்குள் சென்று இருக்கிறார். சிறுமி தன்னை காப்பாற்ற சொல்லி சத்தம் போட்டு இருக்கிறார். உடனே அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமி வீட்டில் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான பெற்றோர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில்  புகார் அளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் சரத்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்

 

Tags :

Share via