இந்தியாவை சீண்டினால் யாரையும் விடமாட்டோம் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

by Staff / 16-04-2022 04:53:45pm
இந்தியாவை சீண்டினால் யாரையும் விடமாட்டோம் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

இந்திய-அமெரிக்க ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளின் பேச்சுவார்த்தை சமீபத்தில் வாஷிங்டனில் நடந்தது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கவாழ் இந்தியர்களை அவர் சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், லடாக் மோதல் தொடர்பாக சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் ரஷியாவுடனான இந்தியாவின் நெருக்கத்தை எதிர்க்கும் அமெரிக்காவுக்கும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

 

Tags :

Share via